Saturday 30 October 2010

முத்தமிழே! வாழிய நீ!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஈன்றவளே! எங்கள் இனிய தமிழ்த் தாயே!


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிக்
கன்னியென இன்னும் கச்சிதமாய் வாழ்பவளே!


பத்துப் பாட்டுத்  தொகையும் பாங்கான கீழ்க்கணக்கும்
காப்பியம் புராணங்கள் கணக்கின்றித் தந்தவளே!


திருவாசகம் தொட்டுத் தேவாரத் திருமுறைகள்
ஆழ்வார்கள் பாட்டெல்லாம் அற்புதமாய்த் தந்தவளே!

இப்பாலும் அப்பாலும் எப்பாலும் போற்றிடவே 
முப்பாலைத்  தந்தவளே! முத்தமிழே! வாழிய நீ!

No comments:

Post a Comment