பொங்கலோ பொங்கல் என்று
போற்றிடும் தமிழர் தம்மின்
தித்திக்கும் திருநாள் இன்று
தேன்தமிழ் வாழ்க! என்றும்
நானிலம் எங்கும் வாழும்
நம்மக்கள் வாழ்க! என்றும்
உலகெலாம் ஒன்று பட்டு
உய்ந்திட வேண்டும் என்றும்
பிறர்க்கென வாழும் மாந்தர்
பெருமையாய் வாழ்க! என்றும்
உழைப்பினைத் தந்தே இந்த
உலகினை உயர்த்து கின்ற
உழைப்பாளர் வாழ்க! என்றும்
உளமார வாழ்த்து கின்றேன்
பொங்கலோ பொங்கல் இந்தப்
புத்தாண்டு வாழ்க! வாழ்க!